AMAZING SPECIES

Friday, May 24, 2013

யூடிஸ் ஃபோரம் அமைப்பின் புதிய நிர்வாக அறங்காவலர் 27/4/2013


யூடிஸ் ஃபோரம் அறக்கட்டளையானது மாற்றுத்திறனாளிகளுக்காக கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பின் புதிய அறங்காவலர்களாக மாற்றுத்திறனாளிகளும், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களும் பொறுப்பேற்றனர். பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் அவர்கள் தலை‍மை தாங்கினார். நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக பன்னாட்டு பார்வையற்ற குழந்தைகளுக்கான கல்வி கழகத்தின் செயல் தலைவர் டாக்டர் எம்.என்.ஜி. மணி கலந்து கொண்டார். முன்னாள் உளவுத் துறை இணை இயக்குநர் சுப்பிரமணிய சிவா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் யூடிஸ் ஃபோரம் அமைப்பின் புதிய முதன்மை நிர்வாக அறங்காவலராக சூர்ய.நாகப்பன் பொறுப்பேற்றார். மேலும் சந்திரகுமார்,  சிவசாமி ஆகிய மாற்றுத்திறனாளிகளும், ஷான்பரித், ஜான்சன் ஆகிய பார்வைக் குறைபாடு உடையவர்களும், உஷா விஸ்வேஸ்வரன், சமரசப்பாண்டியன் ஆகிய பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளும் அறங்காவலர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

டாக்டர் எம்.என்.ஜி. மணி அவர்கள் தனது சிறப்புறையில் "மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அப்பொழுதுதான் அவர்களின் நிர்வாகத் திறமையை இந்த உலகு அறியும், இநத யூடிஸ் அமைப்பின் அறங்காவலர்களாக மாற்றுத்திறனாளிகள் திறமைகாயப் பணியாற்றுவார்கள்" என்று கூறினார். 

விழாவில் பேசிய பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் அவர்கள் "இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மனித குலத்திற்கு ஏதேனும் ஒரு சேவை செய்யவே படைக்கப்பட்டிருக்கிறான், அவர்களில் மாற்றுத்திறனாளிகளும் அடங்கியிருக்கிறார்கள்" என்றார்.

புதிய தலைமைப் பொறுப்பேற்றுப் பேசிய ‍சூர்ய.நாகப்பன் அனைத்து மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் பாதுகாக்க, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பங்கினைப் பெற்றுத் தர யூடிஸ் அமைப்பு தொடர்ந்து பாடுபடும்" என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஆர்விக் ஸ்ரீனிவாசன், ஜெயஸ்ரீ, ரமேஷ், சந்தியா, தமிழ் இனியன், மோகன், திருநாவுக்கரசு, உள்ளிட்டோரும், செவித்திறன் குறைபாடு உடையவர்களின் சங்கப் பிரதிநிதிகளும், மாற்றுத்திறனாளிகளும், மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர். யூடிஸ் அமைப்பின் சேகர் நன்றியுரை கூறினார். 

புகைப்படத்தில்

டாக்டர் எம்.என்.ஜி. மணி அவர்கள் புதிய தலை‍மைப் பொறுப்பேற்ற சூர்ய.நாகப்பனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சந்திரகுமார், ஜான்சன், சமரசப்பாண்டியன், ஷான்பரித்




செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுதினாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் 

கோவை  மேக்(MAK) மருத்துவமனை திருவள்ளுவர் அறக்கட்டளை  யூடிஸ் அமைப்பு காலிபர் அறக்கட்டளை இணைந்து செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுதினாளிகளுக்கு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். மேட்டுபாளையம் சாலை சேரன் நகரில் உள்ள   யூடிஸ் அலுவலகத்தில் (14-4-13) காலை 9 மணிக்கு முகாம் துவங்கியது . முகாமை பி.என்.புதூர் - bi mettal நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை  தலைவர் திரு . பாலதண்டாயுதம் முகாமை துவக்கி வைத்தார். ஹோமியோபதி மருத்துவர் மு.ந.புகழேந்தி(9842224158)  செவித்திறன் குறைபாடு  உடையவர்களை பரிசோதித்து தகுந்த மருந்துகளை  வழங்கினார் . காலிபர் அறக்கட்டளை இயக்குனர் சூர்ய.நாகப்பன், காலிபர் மோகன் ஆகியோர் கலதந்து கொண்டனர். GCT பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொண்டர்களாக பணியாற்றினர். கோவை , சேலம் , நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து    பெரும்திரளான செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுதிரனாளிகள் கலந்து  கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஆண்டு முழுவதும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். 

Dinakaran News 8-4-2013


கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மகளிர் அமைப்புக் கூட்டம் 7-4-2013





கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்த மகளிர் 7/4/2013 அன்று சேரன் நகரில் உளள யூடிஸ் ஃபோரம் அமைபபில் கூடி அவர்களது பிரச்சனைகளை விவாதித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுயதொழில் துவங்கிய, துவங்க உள்ள மாற்றுத்திறனாளி மகளிருக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும் மாற்றுத்திறன் மகளிர் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகள், ஜுன் மாதம் பள்ளி திறக்கும் பொழுது வறுமையில் உள்ள மாற்றுத்திறன் மகளிர் அவர்களுது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அதற்கான செலவுகளுக்கான உதவிளைப் பெறுவது, அதற்கு பணியில் உள்ள மாற்றுத்திறன் மகளிர் எவ்வாறு உதவுவது என்பது போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.

மேலும் மாற்றுத்திறன் மகளிர்களுக்கு பசுமை வீடுகளில் இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமையில் வீடுகள் கட்டித்தர மாவட்ட ஆட்சித் தலைவரி அவரிகளிடம் மனு அளிப்பது என்று முடிவெடுத்தனர்.
இவ்வமைப்பின் தலைவி பாலகிருத்திகா, துணைத் தலைவி மீனா ஆகியோர் மாற்றுததிறனாளி மகளிருக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

கேலிபர் அமைப்புத் தலைவர் சூர்ய.நகாகப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொணடு சிறப்புரை வழங்கினார்.

DISTRICT DIFFERENTLY ABLED FORUM MEETING ON 29TH MARCH 2013




கோவை மாவட்டம மேட்டுப்பாளையம் சாலை, சேரன் நகரில் அமைந்துள்ள யூடிஸ் ஃபோரம் அலுவலகத்தில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 29/3/2013 அன்று நடைபெற்றது. இதில் இந்திய பார்வையற்றோர் சங்கம, கோவை மாவடட மாற்றுத்திறனாளிகள் சங்கம், கேலிபர் அமைப்பு, விவேகம் அறக்கட்டளை ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. 

International Women’s Day for PWD’s on 8th March 2013








கேலிபர் பயிற்சி மையம, கோவை மாவட்ட மாற்றுததிறனாளிகள் சங்கம், விவேகம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறன் மகளிருக்கான சிறப்புக் கூட்டத்தை 8/3/2013 அன்று காந்திபுரம பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி மகளிரின் உரிமைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

மாற்றுத்திறன் மகளிர் அமைப்பின் சார்பாக குமாரி.பாலகிருத்திகா, குமாரி.மீனா ஆகியோரும், கோவை மாவட்ட மாற்றுத்திறன் மகளிர் அமைப்பின் சார்பாக குமாரி.ஹேமா, விவேகம் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு.விவேகன் பாலாஜி, திருமதி.ஷாலினி பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். டாக்டர்.டிம்பிள் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆலோசனை வழங்கினார்.

கேலிபர் அறக்கட்டளை சார்பில் சூர்ய.நாகப்பன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

செவித்திறன் குறைபாடு உடைய மகளிரின் பிரதிநிதியாக திருமதி.ஜெயஸ்ரீ கலந்து கருத்துரை வழங்கினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மகளிருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் திரு.கன்னியப்பன் நன்றியுரை வழங்கினார்.